என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
மரத்தில் கார் மோதி விபத்து; ஓட்டல் அதிபர் பரிதாப சாவு
- மரத்தில் கார் மோதிய விபத்தில் ஓட்டல் அதிபர் பரிதாப இறந்தார்.
- உயிருக்கு போராடிய அவரது மனைவி சாந்திலட்சுமியை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விருதுநகர்
சிவகாசி காமராஜர் காலனியை சேர்ந்தவர் பஞ்சாட்சரம் (வயது 51).இவர் அதே பகுதியில் இயற்கை உணவகம் என்ற பெயரில் ஓட்டல் நடத்தி வருகிறார். நேற்று இவர் தனது மனைவி சாந்திலட்சுமியிடம் காரில் மதுரையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார்.
பின்னர் இருவரும் நள்ளிரவு நேரத்தில் காரில் ஊருக்கு புறப்பட்டனர். இரவு 1.30 மணியளவில் விருதுநகர்-சிவகாசி ரோட்டில் கார் சென்றுகொண்டிருந்தது. உப்போடை பகுதியில் வந்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி ரோட்டோர புளியமரத்தில் பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது. அதில் பயணம் செய்த பஞ்சாட்சரம் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். உயிருக்கு போராடிய அவரது மனைவி சாந்திலட்சுமியை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து ஆமத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்