search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    மரத்தில் கார் மோதி விபத்து; ஓட்டல் அதிபர் பரிதாப சாவு
    X

    மரத்தில் கார் மோதி விபத்து; ஓட்டல் அதிபர் பரிதாப சாவு

    • மரத்தில் கார் மோதிய விபத்தில் ஓட்டல் அதிபர் பரிதாப இறந்தார்.
    • உயிருக்கு போராடிய அவரது மனைவி சாந்திலட்சுமியை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விருதுநகர்

    சிவகாசி காமராஜர் காலனியை சேர்ந்தவர் பஞ்சாட்சரம் (வயது 51).இவர் அதே பகுதியில் இயற்கை உணவகம் என்ற பெயரில் ஓட்டல் நடத்தி வருகிறார். நேற்று இவர் தனது மனைவி சாந்திலட்சுமியிடம் காரில் மதுரையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார்.

    பின்னர் இருவரும் நள்ளிரவு நேரத்தில் காரில் ஊருக்கு புறப்பட்டனர். இரவு 1.30 மணியளவில் விருதுநகர்-சிவகாசி ரோட்டில் கார் சென்றுகொண்டிருந்தது. உப்போடை பகுதியில் வந்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி ரோட்டோர புளியமரத்தில் பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது. அதில் பயணம் செய்த பஞ்சாட்சரம் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். உயிருக்கு போராடிய அவரது மனைவி சாந்திலட்சுமியை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்து குறித்து ஆமத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×