search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    11 வருடங்களுக்கு பிறகு நடந்த தேரோட்டம்
    X

    11 வருடங்களுக்கு பிறகு நடந்த தேரோட்டம்

    • 11 வருடங்களுக்கு பிறகு நடந்த தேரோட்டம் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
    • ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் பூக்குழி திருவிழா விமரிசையாக நடைபெறும்.

    அருப்புக்கோட்டை

    அருப்புக்கோட்டையில் நாடார்கள் உறவின்முறை பொது அபிவிருத்தி டிரஸ்டுக்கு பாத்தியப்பட்ட முத்து மாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இங்கு ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் பொங்கல் மற்றும் பூக்குழி திருவிழா விமரிசையாக நடைபெறும்.

    இந்த திருவிழாவில் அருப்புக்கோட்டையை சுற்றியுள்ள பல கிராமங்களில் இருந்தும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேர்த்திக்கடனை செலுத்தி பூக்குழி இறங்குவார்கள். இந்த வருடமும் மார்ச் 28-ந் தேதி கொடி ஏற்றத்துடன் திருவிழா தொடங்கியது. ஏப்ரல் 6-ந் தேதி பூக்குழி திருவிழா நடந்தது. இந்த நிலையில் 11 வருடங்களுக்குப் பிறகு இன்று முத்து மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது. இந்த தேரோட்டம் பெரிய கடை வீதி, பழைய பஸ் நிலையம் வழியாக மதுரை சாலையில் நடைபெற்றது.

    இதில் உறவின்முறை தலைவர் காமராஜர், செயலாளர் முத்துசாமி, டிரஸ்டி ராஜரத்தினம், முன்னாள் உறவின்முறை தலைவர் மனோகரன், சிறப்பு ஆலோசகர் ரவீந்திரன், பள்ளிச் செயலாளர்கள் மணி முருகன், செல்வம், சவுந்திரபாண்டி, குணசேகரன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×