search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    2 ஆண்டுகளுக்கு பிறகு ஆடி அமாவாசை திருவிழா
    X

    2 ஆண்டுகளுக்கு பிறகு ஆடி அமாவாசை திருவிழா

    • சதுரகிரியில் ஆண்டுகளுக்கு பிறகு ஆடி அமாவாசை திருவிழா 28-ந் தேதி நடக்கிறது.
    • விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலர் மாரிமுத்து ஆகியோர் செய்து வருகின்றனர்.

    வத்திராயிருப்பு

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரியில் சுந்தர மகாலிங்கம் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்தகோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிமாதம் ஆடி அமாவாசை திருவிழா சிறப்பாக நடைபெறும்.

    இந்தநிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இந்த விழாவில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

    இந்த ஆண்டுக்கான ஆடி அமாவாசை திருவிழா வருகிற 28-ந்தேதி நடக்கிறது. 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆடி அமாவாசை திருவிழாவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதையொட்டி பல்வேறு கட்டுப்பாடுகளுடன் வருகிற 26-ந் தேதி முதல் 29-ந்தேதி வரை 4 நாட்கள் மட்டுமே பக்தர்கள் மலையேறிச் சென்று சாமி தரிசனம் செய்வதற்கு கோவில் நிர்வாகம் சார்பில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலர் மாரிமுத்து ஆகியோர் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×