என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கர்ப்பிணி பெண்ணை தாக்கி கொலை மிரட்டல்
- கர்ப்பிணி பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
- சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் விசாரணை நடத்தி இசக்கி துரைச்சி உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளார்.
ராஜபாளையம்
ராஜபாளையம் அருகே உள்ள தேசிகாபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் பானுப்பிரியா (வயது 39). திருமணமான இவர் கணவ ருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து தாய் வீட்டில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் பானுப் பிரியாவுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த திருமணமான இசக்கி ராஜா என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. இருவரும் நெருங்கி பழகியதில் பானுப் பிரியா கர்ப்பமானார்.
சம்பவத்தன்று இசக்கி ராஜாவை பார்ப்பதற்காக பானுப்பிரியா அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது அங்கிருந்த இசக்கி ராஜாவின் மனைவி இசக்கி துரைச்சி, உறவி னர்கள் மாரியம்மாள், ராமலட்சுமி, ஆனந்தராஜ் ஆகிய 4 பேர் பானுப்பிரி யாவிடம் தகராறு செய்து அவரை சரமாரி தாக்கி கொலை மிரட்டல் விடுத்த தாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பானுப் பிரியா தளவாய்புரம் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் விசாரணை நடத்தி இசக்கி துரைச்சி உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்