search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போதைப்பொருள், சைபர் குற்றம் குறித்து விழிப்புணர்வு
    X

    போதைப்பொருள், சைபர் குற்றம் குறித்து விழிப்புணர்வு

    • அரசு பள்ளி மாணவர்களுக்கு போதைப்பொருள், சைபர் குற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
    • போக்சோ சட்டம், குழந்தை திருமணம், சாதி அடையாளங்களை தவிர்ப்பது ஆகியவை குறித்தும் போலீசார் ஆலேசானை வழங்கினர்.

    காரியாபட்டி

    விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசபெருமாள், உத்தரவின்பேரில் பள்ளி மாணவர்களுக்கு போதை பொருள், சைபர் குற்றங்கள் குறித்து போலீசார் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அதன்படி திருச்சுழி போலீஸ் துணை சூப்பிரண்டு ஆலோசனைப் படி அ.முக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் காவல்துறை சார்பில் போதை தடுப்பு மற்றும் சைபர் கிரைம் குற்ற தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

    கூட்டத்திற்கு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் தலைமை தாங்கினார். அ.முக்குளம் சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமார் கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஆலோ சனைகளை வழங்கினார்.

    கூட்டத்ததில் சைபர் குற்றங்கள் குறித்தும், 1930 புகார் எண் குறித்தும் விளக்கப்பட்டது.

    பாலியல் குற்றங்கள் குறித்தும், குற்றங்களில் இருந்து எவ்வாறு விடுபட வேண்டும்? என்பது பற்றியும் எடுத்து கூறப் பட்டது. பெற்றோர்களை குடிப்பழக்கத்தில் இருந்து விடுபடுவதற்கான வழிமுறைகள், போக்சோ சட்டம், குழந்தை திருமணம், சமூக ஊடகங்கள் பயன்பாட்டு முறை, சாதி அடையாளங்களை தவிர்ப்பது ஆகியவை குறித்தும் போலீசார் ஆலேசானை வழங்கினர்.

    Next Story
    ×