என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
கார் மோதி விபத்து
- கார் மோதி விபத்தில் பெண் பரிதாபமாக இறந்தார்.
- சிவகாசி சாட்சியாபுரத்தைச் சேர்ந்த கார் டிரைவர் நெடுஞ்செழியனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் லட்சுமி காலனியைச் சேர்ந்தவர் முகமது அப்துல் காதர். இவரது மனைவி சாந்தா பானு (வயது 45). இவர்களது மகள் ரிஸ்வானா (19).
நேற்று சாந்தாபானு தனது மகளுடன் மதுரைக்கு சென்றார். பின்னர் 2 பேரும் இரவு அரசு பஸ்சில் ஊர் திரும்பினர்.விருதுநகர் 4 வழிச்சாலையில் உள்ள போக்குவரத்து பணிமனை முன்புள்ள பஸ் நிறுத்தத்தில் தாய்- மகள் இறங்கினர்.
பின்னர் இருவரும் 4 வழிச்சாலையை கடக்க முயன்றனர். அப்போது மதுரையில் இருந்து சிவகாசி சென்ற கார் எதிர்பாராத விதமாக சாந்தாபானு, ரிஸ்வானா ஆகியோர் மீது மோதியது. இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். மகள் கண் முன் சாந்தா பானு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
உயிருக்கு போராடிய ரிஸ்வானாவை அப்பகுதி யினர் மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து தொடர்பாக பாண்டியன் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து சிவகாசி சாட்சியாபுரத்தைச் சேர்ந்த கார் டிரைவர் நெடுஞ்செழியன் (57) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்