என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
காரை நிறுத்துவது தொடர்பாக இருதரப்பினர் மோதல்
- ராஜபாளையத்தில் காரை நிறுத்துவது தொடர்பாக இருதரப்பினர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது.
- 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் வடக்கு மலையடிபட்டி காட்டுநாயக்கர் தெருவில் வசிப்பவர் ஈஸ்வரன் (வயது 25) இவர் தனது காரை நிறுத்த சென்றபோது வழியில் நின்ற ஆட்டோவை ஒதுக்கி விடுமாறு கூறியுள்ளார். அதற்கு ஆட்டோ டிரைவர் சீனிவாசன் (35 )என்பவர் மறுப்பு தெரிவித்து தகராறு செய்துள்ளார். இதனைக் கண்ட ஈஸ்வரனின் உறவினர் முனீஸ்வரன், சீனிவாசனை கண்டித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து சீனிவாசன், அவரது தம்பி முருகன் ஆகியோர் அரிவாளை எடுத்து வந்து முனீஸ்வரனை வெட்டி உள்ளனர். அப்போது ஈஸ்வரன் தரப்பை சேர்ந்த பார்த்திபன், மாரிமுத்து, முனீஸ்வரன் ஆகியோர் சீனிவாசனை தாக்கி உள்ளனர். இந்த மோதலில் முனீஸ்வரன், சீனிவாசன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
இது பற்றி ஈஸ்வரன் ராஜபாளையம் வடக்கு போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சீனிவாசன், முருகன் ஆகியோர் மீதும், சீனிவாசன் கொடுத்த புகாரின் பேரில் ஈஸ்வரன், பார்த்திபன், மாரிமுத்து, முனீஸ்வரன் ஆகிய 4 பேர் மீதும் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்