என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பாம்பு கடித்து பெண்-முதியவர் சாவு
- பாம்பு கடித்து பெண்-முதியவர் பரிதாபமாக இறந்தனர்.
- சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
விருதுநகர்
விருதுநகர் அருகே உள்ள சின்னபேராளி கிழக்கு தெருவை சேர்ந்தவர் இந்திராணி(வயது55). இவர் 100 நாள் வேலை திட்டத்தில் கருப்பசாமி கோவில் அருகே உள்ள ஓடை பகுதியில் புதர்களை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்ேபாது அவரது இடது காலில் பாம்பு கடித்துள்ளது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இந்திராணி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து இந்திராணியின் மகன் முத்துமணி கொடுத்த புகாரின்பேரில் விருதுநகர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாத்தூர் அருகே ஓ.மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் லட்சுமணன் (63). ஆடு மேய்க்கும் தொழிலாளியான இவர் சம்பவத்தன்று காட்டுக்கு சென்றார். அப்போது அவரை பாம்பு கடித்தது. உயிருக்கு ஆபத்தான நிலையில் சாத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே லட்சுமணன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்