search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாணவர்களுக்கு இலவச தேசிய கொடி வழங்கல்
    X

    மாணவர்களுக்கு இலவச தேசிய கொடி வழங்கல்

    • இல்லம் தேடி கல்வி மையத்தில் மாணவர்களுக்கு இலவச தேசிய கொடி வழங்கப்பட்டது.
    • தன்னார்வலர் மகாலட்சுமி தலைமையில் நடந்தது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூரில் இல்லம் தேடி கல்வி மையத்திற்கு வரும் மாணவர்களுக்கு இலவசமாக தேசிய கொடி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மல்லியில் உள்ள கிராமப்புற நூலக வளாகத்தில் நடைபெறும் இல்லம் தேடி கல்வி மையத்தில் இதற்கான நிகழ்ச்சி தன்னார்வலர் மகாலட்சுமி தலைமையில் நடந்தது. திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார் ஞானராஜ் முன்னிலை வகித்தார். மாணவர்களுக்கு தேசிய கொடியை வழங்கி ஒருங்கிணைந்த பள்ளி கல்வித் திட்டத்தின் மாவட்ட உதவித் திட்ட அலுவலர் ஜோதிமணிராஜன் பேசினார்.

    முன்னதாக மாணவர்கள் வீடுகளில் தேசியக் கொடியை பறக்கவிடும் முறை மற்றும் அதற்கு செலுத்த வேண்டிய மரியாதை குறித்து விளக்கி கூறப்பட்டது. பின்னர் மாணவர்கள் வீடுகளில் தேசிய கொடியை ஏற்றுவோம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். மாணவி யோகரசி, மாணவர் கவுதம்குமார் ஆகியோர் சுதந்திர போராட்ட வீரர்கள் வேலுநாச்சியார், பாரதியார் குறித்து கலை நிகழ்ச்சி நடத்தினர். மடவார்வளாகம் தன்னார்வலர் சிவகாமி நன்றி கூறினார்.

    Next Story
    ×