search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீடு புகுந்து நகை-பணம் திருட்டு
    X

    வீடு புகுந்து நகை-பணம் திருட்டு

    • வீடு புகுந்து நகை-பணம் திருடப்பட்டது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    சிவகாசி அருகே உள்ள எம்.புதுப்பட்டி சிலோன் காலனியை சேர்ந்தவர் காளீஸ்வரி(வயது33). இவர் வெளியூர் சென்றுவிட்டு வீடு திரும்பியபோது முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ.5 ஆயிரத்து 500 மற்றும் 3 பவுன் நகைகள் திருடப்பட்டிருந்தது. யாரோ மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து பணம், நகையை திருடிச்சென்றுள்ளனர். இதுகுறித்து திருத்தங்கல் போலீஸ் நிலையத்தில் காளீஸ்வரி புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சாத்தூர் ரெயில் நிலையத்தில் ரெயில் என்ஜின்களை நிறுத்தும் லூப்லைன் பகுதியில் பணியாளர்கள் பராமரிப்பு பணிக்காக வந்தனர். அப்போது அந்த தண்டவாளத்தில் பொருத்தப்பட்டிருந்த 400 ஸ்லிப்பர் கிளிப்புகள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் ரெயில்வே பாதுகாப்பு படையினரிடம் புகார் கொடுத்தனர். அவர்கள் ஸ்லிப்பர் கிளிப்புகளை திருடிச்சென்ற மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×