search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சர்வதேச கருத்தரங்கு
    X

    சர்வதேச கருத்தரங்கு

    • கலசலிங்கம் பார்மசி கல்லூரியில் சர்வதேச கருத்தரங்கு நடந்தது.
    • இதில் பல மாநில மாணவர்கள் 250 பேர்கலந்துகொண்டு பயனடைந்தனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    கலசலிங்கம் மருந்தாக்கியல் கல்லூரி, ஐ.பி.ஏ. தென்தமிழக கிளையுடன் இணைந்து 61-வது தேசிய மருந்தியல் வார விழா, சர்வதேச கருத்தரங்கு ''அறிவு காப்புரிமை, மருந்து கண்டுபிடிப்பு, ஆராய்ச்சி, சவால்கள்'' என்ற தலைப்பில் நடத்தியது. கல்லூரி செயலாளர் சசி ஆனந்த் தலைமை தாங்கினார்.

    முதல்வர் வெங்கடேசன் வரவேற்றார். அமெரிக்காவின் வெஸ்பீல்ட், பனகர் காப்புரிமை மைய தலைவர், உமேஷ் வி.பனகர் கருத்தரங்கை தொடங்கி வைத்து மலரை வெளியிட்டார். எஸ்.ஆர்.எம். மருந்தியல் துறை தலைவர் இளங்கோ, மலேசியாவின் கே.பி.ஜே ஹெல்த்கேர் யுனிவர்சிட்டி பேராசிரியர் அனந்த ராஜகோபால், கலசலிங்கம் பல்கலைக்கழக பதிவாளர் வாசுதேவன், கலசலிங்கம் மருத்துவ மருத்துவமனை டீன் சேவியர் செல்வ சுரேஷ் ஆகியோர் பேசினர்.

    விவாத நிகழ்வில், எஸ்.லட்சுமண பிரபு, கே.இளங்கோ, கே.அனந்த ராஜகோபால் ஆகியோர் உரையாற்றினர். கலசலிங்கம்,மருந்தாக்கியல் கல்லூரிக்கும், அமெரிக்காவின் அறிவு காப்புரிமை பனகர் மையத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் பல மாநில மாணவர்கள் 250 பேர்கலந்துகொண்டு பயனடைந்தனர்.

    Next Story
    ×