search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முத்துமாரி அம்மன் கோவில் பங்குனி திருவிழா கொடியேற்றம்
    X

    கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. (உள்படம்: சிறப்பு அலங்காரத்தில் முத்துமாரியம்மன்.)

    முத்துமாரி அம்மன் கோவில் பங்குனி திருவிழா கொடியேற்றம்

    • அருப்புக்கோட்டை முத்துமாரி அம்மன் கோவில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • கடந்த 26-ந் தேதி தொடங்கி அடுத்த மாதம் 16-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    அருப்புக்கோட்டை

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறை பொது அபிவிருத்தி டிரஸ்ட்க்கு பாத்தியப்பட்ட முத்துமாரியம்மன் கோவிலில் பங்குனி பொங்கல் விழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது

    விழாவை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் கட்டளை தாரர்களால் அம்மன் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

    இந்த திருவிழாவானது 15 நாட்கள் நடைபெறும். வருகிற 4-ந்தேதி அம்ம னுக்கு பொங்கல் வைத்து வழிபடும் நிகழ்ச்சியும், 5-ந் தேதி அக்கினி சட்டி பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியும் வெகு விமர்சையாக நடைபெறும்

    7-ந்தேதி தேரோட்டம் நடைபெறும் நிகழ்ச்சியில் புரவலர் ராமர் உற்சவ கமிட்டி தலைவர் மனோக ரன், உற்சவ கமிட்டி கன்வீனர் ராஜரத்தினம், உறவின் முறை காரியதரிசி முத்துசாமி, உறவின்முறை தலைவர் காமராஜன், பொருட்காட்சி கமிட்டி தலைவர் ஆலோசகரமான ரவீந்திரன் பொருட்காட்சி கமிட்டி செயலாளர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயலாளர் கவுன்சிலர் மணி முருகன் எஸ்.பி.கே கல்வி குழுமம் தலைவர் ஜெயக்குமார், உறவின்முறை உபதலைவர் முத்துக்குமார், பொருளாளர் செந்தூரன், உதவிச் செயலாளர் சிவக் குமார் எஸ்.பி.கே. பெண்கள் மேல்நிலைப் பள்ளி செயலாளர் சார்லஸ் தியாகராஜன், மெட்ரிக் பள்ளி செயலாளர் சவுந்தர பாண்டியன், எஸ்.பி.கே. ஜூனியர் நர்சரி பிரைமரி பள்ளி செயலாளர் ராஜ செல்வம், எஸ்.பி.கே. கல்லூரி செயலாளர் குணசேகரன், எஸ்.பி.கே. இன்டர்நேஷனல் பள்ளி செயலாளர் கனகவேல் ராஜன் தியாகராஜன், பவுர்ண டைப்ரைட்டிங் பள்ளிச் செயலாளர் சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மேலும் 40-வது பொருட்காட்சி கடந்த 26-ந்தேதி தொடங்கி அடுத்த மாதம் 16-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    Next Story
    ×