search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இளம்பெண் பலாத்காரம்
    X

    இளம்பெண் பலாத்காரம்

    • திருமண ஆசை காட்டி இளம்பெண் பலாத்காரம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • திருமணம் செய்து கொள்ள முடியாது என மறுத்த மாரீஸ்வரன் கொலை மிரட்டல் விடுத்தாகவும் கூறப்படுகிறது.

    விருதுநகர்

    சிவகாசி அருகே உள்ள பூலாவூரணி புதுத்தெருவை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் மாரீஸ்வரன் (வயது20). இவர் அதே பகுதியை சேர்ந்த 18 வயதுடைய பெண்ணை கடந்த சில வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

    அப்போது திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி மாரீஸ்வரன் அந்த பெண்ணிடம் நெருங்கி பழகி உள்ளார். இதன் காரணமாக இளம்பெண் கர்ப்பமானார். இதனை அறிந்து அதிர்ச்சி அடைந்த பெண்ணின் குடும்பத்தினர் மாரீஸ்வரன் வீட்டிற்கு சென்று கேட்டுள்ளனர். அப்போது உங்கள் பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடியாது என மறுத்த மாரீஸ்வரன் கொலை மிரட்டல் விடுத்தாகவும் கூறப்படுகிறது.

    இதனால் பாதிக்கப்பட்ட அந்த பெண் சிவகாசி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரீஸ்வரனை கைது செய்தனர்.

    Next Story
    ×