search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எஸ்.பி.கே. கல்வி குழும மாணவர்கள் 6 ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் கைதட்டி சாதனை
    X

    எஸ்.பி.கே. கல்வி குழும மாணவர்களின் சாதனையை அங்கீகரித்து சான்றிதழ் வழங்கப்பட்டது.

    எஸ்.பி.கே. கல்வி குழும மாணவர்கள் 6 ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் கைதட்டி சாதனை

    • எஸ்.பி.கே. கல்வி குழும மாணவர்கள் 6 ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் கைதட்டி சாதனை படைத்துள்ளனர்.
    • வி லவ் அவர் டீச்சர் என்ற வடிவத்தில் நின்று தொடர்ந்து 10 நிமிடம் கைதட்டி சாதனை படைத்தனர்.

    அருப்புக்கோட்டை

    அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. மேல்நிலைப் பள்ளி யில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. இதில் துபாய் தனியார் நிறுவனம் மற்றும் எஸ்.பி.கே. கல்விக் குழுமங்கள் இணைந்து சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் எஸ்.பி.கே. கல்வி நிறுவனங்களில் படிக்கும் 5 ஆயிரத்து 900 மாணவ- மாணவிகள் ஆசிரியர்களை கவுரவிக்கும் வகையில் வி லவ் அவர் டீச்சர் என்ற வடிவத்தில் நின்று தொடர்ந்து 10 நிமிடம் கைதட்டி சாதனை படைத்த னர்.

    இந்த நிகழ்ச்சி துபாய் ஐன்ஸ்டீன் வேர்ல்ட் ரெக்கார்ட் நிறுவனத்தால் உலக சாதனையாக அங்கீ கரிக்கப்பட்டது. நிகழ்ச்சி யில் கல்லூரி முதல்வர் செல்லத் தாய் வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக தாசில்தார் அறிவழகன் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சோபியா பாய் கலந்து கொண்டனர்.

    மேலும் நிகழ்ச்சியில் நாடார்கள் உறவின்முறை தலைவர் காமராஜர் எஸ்.பி.கே. கல்வி குழும தலைவர் ஜெயக்குமார், எஸ்.பி.கே. பெண்கள் மேல்நிலைப் பள்ளி செயலாளர் காசி கோபிநாத், ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயலாளர் மணிமுருகன் இன்டர்நேஷனல் பள்ளி செயலாளர் கனகவேல் ராஜன், எஸ்.பி.கே. கல்லூரி செயலாளர் முத்து தினகரன், எஸ்.பி.கே. தியாகராஜன் மெமோரியல் மெட்ரிக் பள்ளி செயலாளர் சவுந்தர பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×