search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புகையிலை பொருட்கள் கடத்தல்- 4 பேர் கைது
    X

    புகையிலை பொருட்கள் கடத்தல்- 4 பேர் கைது

    • புகையிலை பொருட்கள் கடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • போலீசார் அதனை கடத்திய காளிராஜ் (28), ரேவந்த் (27) ஆகிய 2 பேரை ைகது செய்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி திருச்சுழி அருகே உள்ள மேலக்கண்ணமங்கலம் பகுதியில் போலீசார் ரோந்து சென்றபோது அங்குள்ள பெட்டிக்கடையில் பதுக்கி வைத்திருந்த 94 புகையிலை பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து கடை உரிமையாளர் பூமிநாதன் (60) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    இதேபோல் ஸ்ரீவில்லி புத்தூர் ராஜகோபாலபுரம் பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் 14 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு கடை உரிமையாளர் பால கிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர்.

    சாத்தூர் அருகே நத்தத்துபட்டி பகுதியில் தாலுகா போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர் அப்போது அந்த வழியாக வந்த காரை மறித்து அதில் இருந்த 2 பேரிடம் விசாரணை நடத்தியபோது முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர்.

    இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் காரை சோதனை செய்தபோது அதில் ரூ.26 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் கடத்துவது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் அதனை கடத்திய காளிராஜ் (28), ரேவந்த் (27) ஆகிய 2 பேரை ைகது செய்தனர்.

    Next Story
    ×