search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    மாணவர்களுக்கான சாப்ட்வேர் பயிற்சி
    X

    கருத்தரங்கில் பங்கேற்ற டெக்சாஸ் பல்கலைக்கழக கம்ப்யூட்டர் துறை இயக்குநர் ஜெய்வீராசாமிக்கு பொன்னாடை அணிவிக்கப்பட்டது.

    மாணவர்களுக்கான சாப்ட்வேர் பயிற்சி

    • மாணவர்களுக்கான சாப்ட்வேர் பயிற்சியை அமெரிக்க பல்கலைக்கழக பேராசிரியர் அளித்தார்.
    • சுமார் 250 மாணவ-மாணவிகள், 50-க்கும் மேற்பட்ட பேராசி ரியர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

    சிவகாசி

    சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியின் கணிப்பொறியியல் துறையின் ''அசோசியேஷன் பார் கம்ப்யூட்டிங மெஷினரி'' (ஏ.எல்.எம்.) என்ற அமைப்பும் மின்னனு மற்றும் தொலைத் தொடர்பியல் துறையின் ஐ.இ.டி.இ. மாணவர் அமைப்பும் இணைந்து 2 பயிற்சி பட்டறையை ''கிரியேட்டிவ் கோடிங்- ஜாவா ஸ்கிரிப்ட்'' என்ற தலைப்பில் நடந்தது.

    பி.எஸ்.ஆர். கல்வி குழுமங்களின் தாளாளர் ஆர். சோலைசாமி தலைமை தாங்கினார். இயக்குநர் விக்னேசுவரி அருண்குமார் முன்னிலை வகித்தார். முதல்வர் செந்தில்குமார், டீன் மாரிச்சாமி, கணிப்பொறியியல் துறைத்தலைவர் ராமதிலகம், மின்னணு மற்றும் தொலை தொடர்பியல் துறைத் தலைவர் வளர்மதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இதில் சிறப்பு விருந்தினராக அமெரி க்காவின் டாலஸ் மாகா ணத்தின், டெக்சாஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கம்ப்யூட்டர் துறையின் இயக்குநர் ஜெய்வீராசாமி கலந்து கொண்டு பயிற்சி அளித்தார். ஜாவா ஸ்கிரிப்ட் என்ற புேராகிராமிங் மூலமாக கோடிங் எழுதுவதற்கான எளிய வழிமுறைகளை எடுத்து கூறினார்.

    இதில் சுமார் 250 மாணவ-மாணவிகள், 50-க்கும் மேற்பட்ட பேராசி ரியர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் பாலசுப்ரமணியன், பேரா சிரியர்கள் அருண்சண்முகம், கார்த்திகேயன், பேராசி ரியை தனம் மற்றும் கணிப்பொறியியல் துறை மற்றும் மின்னனு ெதாலைத் தொடர்பியல் துறை பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×