என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
விளையாட்டு போட்டி
- தொழிலாளர்களுக்கான 41-வது விளையாட்டு விழா ஆலையின் வளாகத்தில் நடந்தது.
- இந்த விழாவிற்கு மில்களின் மேனேஜிங் டைரக்டர்கள் என்.ஆர்.கே. ராம்குமார்ராஜா, நளினா ராமலட்சுமி தலைமை தாங்கினர்.
ராஜபாளையம்
ராஜபாளையம் ராம்கோ குரூப் டெக்ஸ்டைல்ஸ் டிவிசன் தி ராமராஜூ சர்ஜிகல் காட்டன் மில்ஸ், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ், சுதர்சனம் பேப்ரிக்ஸ் மற்றும் தரம் டெக்ஸ்டைல்ஸ் ஆகிய தொழிற்சாலைகளின் தொழிலாளர்களுக்கான 41-வது விளையாட்டு விழா ஆலையின் வளாகத்தில் நடந்தது.
ராம்கோ குரூப் சேர்மன் பி.ஆர்.வெங்கட்ராம ராஜா வழிகாட்டுதலின்படி நடந்த இந்த விழாவிற்கு மில்களின் மேனேஜிங் டைரக்டர்கள் என்.ஆர்.கே. ராம்குமார்ராஜா, நளினா ராமலட்சுமி தலைமை தாங்கினர். முதன்மை நிதிநிலை அதிகாரி விஜய்கோபால் வரவேற்றார்.
தொழிற்சங்க தலை வர்கள் மகாலிங்கம் (எச்.எம்.எஸ்),ரமேஷ் (ஏ.ஜ.டி.யு.சி),சுரேஷ் (ஐ.என்.டி.யு.சி) ஆகியோர் பேசினர். நிர்வாக இயக்குனர்கள் பேசுகையில், ராமராஜூ சர்ஜிகல் காட்டன்மில்ஸ் குழுமத்தில் தொழிலாளர்கள் முழுமை யான ஈடுபாட்டுடனும், அர்ப்பணிப்புடனும் பணிபுரிவதால் ஒரு முதிர்ந்த அறிவு திறனும், இளமையான உத்வேகமும் கலந்த நிறுவனமாக இந்த நிறுவனம் திகழ்கிறது என்றனர்.
கடந்த 2 மாதங்களாக நடந்த பல்வேறு விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று போட்டிகளில் வெற்றி பெற்ற தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்களுக்கு வீட்டு உபயோகப் பொருட்கள் பரிசுகளாக வழங்கப் பட்டது. கடந்த ஆண்டில் ஆலையில் சிறந்த முறையில் பணியாற்றிய தொழிலாளர்கள், 15 முதல் 35 ஆண்டுகள் வரை பணியாற்றி வரும் தொழிலாளர்கள், விடுப்பு எடுக்காமல் பணிபுரியும் தொழிலாளர்கள், வருடத்தில் 295 நாட்களுக்கு மேல் பணியாற்றிய தொழிலாளர்கள் என சுமார் 963 தொழிலாளர்களுக்கு ரொக்கப் பரிசுடன் சான்றிதழ்களை மேனேஜிங்டை ரக்டர்கள் ராம்குமார் ராஜா, நளினா ராமலட்சுமி, டைரக்டர் கஜபதி என்ற என்.ஆர்.கே. ஸ்ரீகண்டன் ராஜா ஆகியோர் வழங்கி பாராட்டினர்.
ராம்கோ குரூப் பிரசிடெண்ட் என். மோகனரங்கன், சீனியர் வைஸ் பிரசிடெண்ட் ஹேமந்த்குமார், பொது மேலாளர் சுந்தரராஜ், மனிதவள மேம்பாட்டுத் துறை துணைப் பொது மேலாளர் ரங்கராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்