search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு இணைய சேவை உபகரணங்களை திருடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை
    X

    அரசு இணைய சேவை உபகரணங்களை திருடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை

    • அரசு இணைய சேவை உபகரணங்களை திருடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
    • விருதுநகர் கலெக்டர் ஜெயசீலன் எச்சரித்துள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விருதுநகர் மாவட்டத்திலுள்ள 450 கிராம ஊராட்சி களிலும், இணையதள வசதி வழங்கும் பாரத் நெட் திட்டமானது, தமிழ்நாடு கண்ணாடி இழைவலை யமைப்பு நிறுவனம் (டான்பிநெட்) மூலம் தற்போது முழு வீச்சில் செயல்ப டுத்தப்பட்டு வருகிறது. இணையதள இணைப்பு வழங்கும் பணியானது வருகிற செப்டம்பர் மாதம் முதல் துவங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கண்ணாடி இழை இணைப்பானது, 85 சதவீதம் மின்கம்பங்கள் மூலமாகவும், 15 சதவீதம் தரைவழியாகவும் இணைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இத்திட்டத்திற்கான ரேக்குகள்/யுபிஎஸ் உள்ளிட்ட உபகரணங்கள், ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் உள்ள கிராம ஊராட்சி சேவைமையம் (VPSC) அல்லது அரசுகட்டிடத்தில் நிறுவப்பட்டு வருகிறது. இந்த உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ள அறையானது, சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவரால் தூய்மையாக பராமரிக்கப்பட்டு வருகிறது.

    இந்த மையங்களில் வைக்கப்பட்டுள்ள யுபிஎஸ், ரூட்டர், ரேக்குகள், கண்ணாடி இழை கேபிள் உபகரணங்கள் யாவும் அரசின் கடமைகளாகும்.

    இவற்றை சேதப்படுத்தும் அல்லது திருடும் நபர்கள் மீது காவல்துறையினர் மூலம் கடுமையான குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×