என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
இளம்பெண் தற்கொலை முயற்சி
- சிவகாசி போலீஸ் நிலையத்தில் இளம்பெண் தற்கொலை முயன்றுள்ளார்.
- மகளிர் போலீஸ் நிலைய முதுநிலை காவலர் கார்த்தீஸ்வரி டவுன் போலீசில் புகார் செய்தார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஆலமரத்துப்பட்டியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மனைவி தேவி (வயது 20). கடந்த சில மாதங்களாக கணவன்-மனைவி இடையே பிரச்சினை இருந்து வந்தது.
இது தொடர்ந்து நீடிக்கவே கடந்த 2-ந்தேதி சிவகாசி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் ராஜ்குமார், தேவியை வர வழைத்து சமரசம் பேசி அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் மீண்டும் அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மனைவியின் நடத்தையில் ராஜ்குமார் சந்தேகம் அடைந்துள்ளார். இதனால் விரக்தி அடைந்த தேவி சிவகாசி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு வந்தார்.
அங்கு பணியில் இருந்த போலீஸ்காரரிடம் தேவி அழுது கொண்டே புகார்களை கூறினார். அப்போது அவரது நடவடிக் கையில் மாற்றம் இருந்தது. பேசி கொண்டிருந்தபோது தேவி திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரை தட்டி எழுப்பி கேட்டபோது, வலிப்பு மாத்திரைகளை அதிகமாக சாப்பிட்டு விட்டதாக தெரி வித்தார். இதையடுத்து தேவியை சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக மகளிர் போலீஸ் நிலைய முதுநிலை காவலர் கார்த்தீஸ்வரி டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் தேவி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்