search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தார்சாலை அமைக்கும் பணிகளை விரைவாக தொடங்க வேண்டும்
    X

    தேசிய நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் பாலமுருகனிடம் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. மனு கொடுத்தார்.

    தார்சாலை அமைக்கும் பணிகளை விரைவாக தொடங்க வேண்டும்

    • தார்சாலை அமைக்கும் பணிகளை விரைவாக தொடங்க வேண்டும் என்று தலைமை பொறியாளரிடம் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. வலியுறுத்தினார்.
    • விரைவில் புதிய தார்ச்சாலை அமைத்து தருவதாக உறுதி அளித்தார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் நகரின் வளர்ச்சித்திட்டப் பணிகளுக்காக நேரு சிலை முதல் சொக்கர்கோவில் வரை உள்ள தேசிய நெடுஞ்சாலையில் தோண்டப்பட்டு திட்டப்ப ணிகள் நடந்தது.

    தற்போது இந்த சாலையில் திட்டப்பணிகள் முடிவடைந்துள்ளதால் புதிய தார்ச்சாலை அமைக்க வேண்டி சென்னை கிண்டியில் உள்ள தேசிய நெடுஞ்சாலைத்துறையின் தலைமைப் பொறியாளர் பாலமுருகனை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. சந்தித்து மனு கொடுத்தார்.

    அப்ேபாது தலைமைப் பொறியாளரிடம் எம்.எல்.ஏ. கூறுகையில், மேற்கண்ட சாலை மிகவும் பழுதடைந்து காணப்படு வதால் பொது மக்கள், வியாபாரிகள் பெரிதும் பாதிப்படைகின்றனர். ஆகவே நேரு சிலை முதல் சொக்கர்கோவில் வரை உள்ள தேசிய நெடுஞ்சாலையில் விரைந்து புதிய தார்ச்சாலை அமைக்க வேண்டும்.

    மேலும் சாலையின் விரிவாக்கத்திற்காக சாலையின் உள்பக்கமாக உள்ள மின் கம்பங்களை நகராட்சி மூலம் சாலை யின் வெளிபக்கமாக மாற்றி யமைத்து–தருவதாக எம்.எல்.ஏ. கூறினார்.

    அதற்கு தலைமை பொறியாளர் மத்திய மற்றும் மாநில நெடுஞ்சாலைத்துறை என 2 துறை அதிகாரிகளிடம் கலந்துபேசி மதிப்பீடு தயார் செய்து டெல்லியில் உள்ள மத்திய நெடுஞ்சாலைத்துறையிடம் நிர்வாக அனுமதி பெற்று விரைவில் புதிய தார்ச்சாலை அமைத்து தருவதாக உறுதி அளித்தார்.

    அதற்கு எம்.எல்.ஏ. மழைக்காலம் தொடங்க இருப்பதால் புதிய தார்ச்சாலை அமைக்கும் வரை சாலையில் உள்ள குண்டும் குழியையும் சீரமைக்கும் பணியை (பேட்ச் ஒர்க்) மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தினார். அதற்கு தலைமை பொறியாளர் கண்டிப்பாக சாலையை சீரமைத்து தருவதாக கூறினார்.

    அப்போது தி.மு.க. ஒன்றிய செயலாளர் சரவணமுருகன் உடனிருந்தார்.

    Next Story
    ×