search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பட்டதாரி பெண்கள் உள்பட 3 பேர் மாயம்
    X

    பட்டதாரி பெண்கள் உள்பட 3 பேர் மாயம்

    • விருதுநகரில் பட்டதாரி பெண்கள் உள்பட 3 பேர் மாயமானார்கள்.
    • இந்த சம்பவங்கள் குறித்து வண்ணம்பட்டி, கீழராஜகுலராமன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வன்னியம்பட்டியை சேர்ந்தவர் முத்துக்குமார். இவருக்கு 2 மகள்கள் உள்ள னர். மூத்த மகள் அபிராமி (வயது 20). சிவகாசி கல்லூரியில் பி.பி.ஏ. படித்து முடித்துள்ளார்.

    சம்பவத்தன்று முத்துக்குமார் மற்றும் அவரது மனைவி வேலைக்கு சென்று விட்டனர். வேலை முடிந்து திரும்பி வந்தபோது வீடு பூட்டப்பட்டிருந்தது. வீட்டின் வெளியே ஒரு கடிதம் இருந்தது. அதில் அவரது மூத்த மகள் அபிராமி வீட்டின் சாவி தங்கையிடம் இருப்பதாக எழுதி இருந்தார்.

    பள்ளியில் இருந்த இளைய மகளிடம் சாவியை வாங்கி வீட்டை முத்துக்குமார் திறந்தார். அப்போது டி.வி.யின் மேல் மற்றொரு கடிதம் இருந்தது. அதில் கூறியிருந்தபடி இளைய மகள் செல்போன் வாட்ஸ்-அப்பில் பார்த்தபோது தான் ஒருவருடன் சென்று விட்டதாக அபிராமி கூறியிருந்தார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த முத்துக்குமார் அபிராமியை பல இடங்களில் தேடினார். இந்நிலையில் நள்ளிரவில் போனில் பேசிய அபிராமி, தான் பாதுகாப்பாக இருப்பதாக கூறி விட்டு போன் இணைப்பை துண்டித்து விட்டார்.

    தனது மகள் மாயமானது குறித்து வண்ணம்பட்டி போலீஸ் நிலையத்தில் முத்துக்குமார் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து மாயமான அபிராமியை தேடி வருகின்றனர்.

    விருதுநகர் அருகே உள்ள ஆமத்தூரை சேர்ந்தவர் காளீஸ்வரி. இவரது மகள் உமாமகேஸ்வரி (வயது 22). சிவகாசியில் உள்ள தனி யார் கல்லூரியில் எம்.ஏ. படித்து முடித்துள்ளார். இந்த நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்ட உமா மகேஸ்வரி விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

    அங்கு சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அவர், கல்லூரிக்கு சென்று சான்றிதழ் வாங்கிவருவதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து சென்றிருக்கிறார். ஆனால் அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. தனது மகள் மாயமானது குறித்து ஆமத்தூர் போலீஸ் நிலை யத்தில் காளீஸ்வரி புகார் செய்தார்.

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்த பரமேஸ்வரி என்பவரது 17 வயது மகள் ராஜபாளையம் அருேக உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்ற மாணவி மாயமா னார்.

    தனது மகள் மாயமானது குறித்து கீழராஜகுலராமன் போலீஸ் நிலையத்தில் தாய் பரமேஸ்வரி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×