search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்
    X

    கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

    • கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நாளை நடக்கிறது.
    • காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்.

    விருதுநகர்

    தமிழ்நாட்டில் கொரோனா தொற்று முற்றிலும் குறைந்திருந்த நிலையில் தற்போது தினசரி தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதைத்தொடர்ந்து சுகாதாரத் துறையின் மூலம் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    இதையொட்டிநாளை (10-ந் தேதி) சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் அன்று சிறப்பு முகாம்கள்நடத்தப்பட்டு பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதர நாட்களிலும் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.

    இதுவரை முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளா தவர்கள், 2-ம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டியவர்கள் மற்றும் 3-ம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் முன்களப்பணியாளர்கள் அனைவரும் தவறாமல் நாளை காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்.

    இந்த தகவலை கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×