என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பெண் விஷம் குடித்து தற்கொலை
- அருப்புக்கோட்டையில் குழந்தை இல்லாத விரக்தியில் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
- விருதுநகர் நகராட்சி ஊழியர் தூக்கில் தொங்கினார்.
விருதுநகர்
மதுரை அவனியாபுரத்தை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது47). இவருக்கும் அருப்புக் கோட்டையைச் சேர்ந்த இந்திரா தேவி (45) என்பவருக்கும் கடந்த 19 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்க ளுக்கு குழந்தை இல்லை.
இதனால் மனவே தனையில் இருந்த இந்திரா தேவி கடந்த சில மாதங்களாக மன மாற்றத்திற்காக அருப்புக்கோட்டையில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று வாழ்க்கையில் விரக்தி அடைந்த இந்திராதேவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அருப்புகோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அருப்புக்கோட்டை அருகே உள்ள செட்டி பட்டியைச் சேர்ந்தவர் லட்சுமி அம்மாள் (வயது 26). இவர் தனியாக வசித்து வந்தார். சில மாதங்களாக மன நிலை பாதிக்கப்பட்ட லட்சுமி அம்மாள் சம்பவத்தன்று அருகில் உள்ள காட்டுப் பகுதிக்குச் சென்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இது குறித்து பந்தல்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் சத்யசாய் நகரை சேர்ந்தவர் இன்னாசி முத்து (55). இவர் விருதுநகர் நகராட்சியில் குடிநீர் வினியோக ஊழியராக வேலை பார்த்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு இவருக்கு இருதய அறுவை சிகிச்சை நடந்தது. இந்த நிலையில் மீண்டும் அவருக்கு இருதய வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த இன்னாசிமுத்து சம்பவத்தன்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பாண்டியன் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்