search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    சொத்து வரி செலுத்தாத வணிக நிறுவனங்களுக்கு எச்சரிக்கை
    X

    சொத்து வரி செலுத்தாத வணிக நிறுவனங்களுக்கு எச்சரிக்கை

    • கடை உரிமையாளர்களுக்கு பேரூராட்சி சார்பில் எச்சரிக்கை நோட்டிஸ் வழங்கப்பட்டது.
    • தவறும் பட்சத்தில் குடிநீர் இணைப்புக்கள் துண்டிக்கப்படும்.

    பாலக்கோடு,

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இருக்கும் வீடு, கடை, வணிக நிறுவனங்கள் என பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம், செலுத்தாத வீடு, கடை உரிமையாளர்களுக்கு பேரூராட்சி சார்பில் எச்சரிக்கை நோட்டிஸ் வழங்கப்பட்டது.

    மேலும் நிலுவை தொகைகள் மற்றும் இதர வரிகளை இம்மாத இறுதிக்குள் செலுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் குடிநீர் இணைப்புக்கள் துண்டிக்கப்படும் என பேரூராட்சி செயல் அலுவலர் டார்த்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    மேலும் அவர் கூறுகையில் பேரூராட்சியின் வளர்ச்சி திட்ட பணிகளுக்கு பொதுமக்கள் தாங்கள் செலுத்த வேண்டிய வரியினை செலுத்தி ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொண்டார்.

    Next Story
    ×