search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    வேளாண்மை கல்லூரியில் மாணவர்கள் வரவேற்பு விழா
    X

    வேளாண்மை கல்லூரியில் மாணவர்கள் வரவேற்பு விழா

    • பெரம்பலூர் தந்தை ரோவர் வேளாண்மை கல்லூரியில் மாணவர்கள் வரவேற்பு விழா
    • பருத்தி ஆராய்ச்சி நிறுவன பயிரில் துறை தலைவர் சோமசுந்தரம் கலந்து கொண்டு பேசினார்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வல்லபுரம் பிரிவு அருகே உள்ள தந்தை ரோவர் வேளாண்மை கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான 16வது ஆண்டு வகுப்புகள் தொடக்க விழாவும் புதிய மாணவர்கள் வரவேற்பு விழாவும் நடைபெற்றது

    விழாவிற்கு தந்தை ரோவர் கல்வி மற்றும் சமூக மேம்பாட்டு நிறுவனங்களின் மேலாண் தலைவர் வரதராஜன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ஜான் அசோக் வரதராஜன் முன்னிலை வகித்தார்.

    விழாவில் சிறப்பு விருந்தினராக வேப்பந்தட்டை பருத்தி ஆராய்ச்சி நிறுவன பயிரில் துறை தலைவர் சோமசுந்தரம் கலந்து கொண்டு பேசினார்

    கல்லூரி முதல்வர் வஹாப் கல்லூரியின் ஒருங்கிணைப்பாளர் சக்திஸ்வரன் ஆகியோர் பேசினார்கள். விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் நிர்வாக அலுவலர் ஜெயசீலன் அலுவலக மேலாளர் திருநாவுக்கரசு ஆகியோர் செய்திருந்தனர்.

    முன்னதாக ஆசிரியர் அப்துல் ரகுமான் வரவேற்றார் முடிவில் முதலாம் ஆண்டு வகுப்பு ஒருங்கிணைப்பாளர் பரமேஸ்வரி நன்றி கூறினார்.

    Next Story
    ×