search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆறுமுகநேரியில் தி.மு.க சார்பில் நலத்திட்ட உதவிகள்-அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்
    X

    விழாவில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நலத்திட்ட உதவிகள் வழங்கிய போது எடுத்த படம். 

    ஆறுமுகநேரியில் தி.மு.க சார்பில் நலத்திட்ட உதவிகள்-அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்

    • அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
    • முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் உருவபடத்திற்கு மரியாதை

    ஆறுமுகநேரி:

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு ஆறுமுகநேரி மெயின் பஜார் சந்திப்பில் அவரது உருவப் படத்திற்கு தி.மு.க சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    இந்த நிகழ்ச்சிக்கு ஆறுமுகநேரி நகர தி.மு.க செயலாளரும் பேரூராட்சி துணைத் தலைவருமான அ.கல்யாணசுந்தரம் தலைமை தாங்கி இனிப்பு வழங்கினார். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக கால்நடை துறை மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    தி.மு.க. மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரிசங்கர், ஆறுமுகநேரி நகர பொருளாளர் பாலசுப்பிரமணியன், ஏ.கே.எல். கூட்டுறவு சங்க துணை தலைவர் நவநீத பாண்டியன், வார்டு கவுன்சிலர் வெங்கடேசன், முன்னாள் கவுன்சிலர் ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×