search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாவூர்சத்திரம் அருகே கணவர் இறந்த துக்கத்தில் மனைவி தற்கொலை
    X

    பாவூர்சத்திரம் அருகே கணவர் இறந்த துக்கத்தில் மனைவி தற்கொலை

    • சங்கர் அரியப்பபுரம் பகுதியில் பிரிண்டிங் பிரஸ் நடத்தி வந்தார்.
    • பிரிண்டிங் பிரஸ்சுக்கு பயன்படுத்தி வந்த கெமிக்கலை குடித்து ராஜம் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானூர் சிவசுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி ராஜம்(வயது 29). இவர்களுக்கு நவிஷ்காஸ்ரீ (5), அரிஹரபாலன் (2) என்ற 2 குழந்தைகள் உள்ளனர். சங்கர் அரியப்பபுரம் பகுதியில் பிரிண்டிங் பிரஸ் நடத்தி வந்தார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சங்கர் உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார்.

    இதனால் மன விரக்தியில் இருந்து வந்த ராஜம் நேற்று வீட்டில் இறந்து கிடந்தார். கணவர் இறந்த துக்கத்தில் பிரிண்டிங் பிரஸ்சுக்கு பயன்படுத்தி வந்த கெமிக்கலை குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்த பாவூர்சத்திரம் போலீசார் அங்கு விரைந்து சென்று ராஜம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×