search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடியிருப்பு பகுதிகளில் உலா வரும் காட்டு எருமைகள்
    X

    குடியிருப்பு பகுதிகளில் உலா வரும் காட்டு எருமைகள்

    • பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.
    • பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கோத்தகிரி,

    கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் சமீப காலமாக அதிகரித்த வண்ணம் உள்ளது. கோத்தகிரி காம்பாய்க்கடை குடியிருப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக 20-க்கும் மேற்பட்ட காட்டெருமைகள் கூட்டமாக பகல் நேரங்களில் பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக உலா வருகிறது. இரவு நேரங்களிலும் அந்த காட்டெருமைகள் சுற்றி வருவதால் சாலையில் வாகனயொட்டிகள் செல்ல முடிவது இல்லை. பின்னர் முகாமிட்டு இருந்த காட்டெருமை கூட்டம் அங்கிருந்த தேயிலை தோட்டத்திற்குள் சென்றது. எனவே வனத்துறையினர் காட்டெருமைகள் ஊருக்குள் வராதவாறு நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×