என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
குடியிருப்புகளை முற்றுகையிட்ட காட்டு யானைகள்
- வனத்துறையினர் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர்.
- வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்து, சிறிது தூரத்துக்கு முன்பு வாகனங்களை நிறுத்தினர்.
ஊட்டி,
சுற்றுப்புற பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. இந்தநிலையில் தட்டாம்பாறையில் காட்டு யானை புகுந்தது. அங்கு பயிரிடப்பட்டு இருந்த பயிர்களை மிதித்து நாசம் செய்தது. அய்யன்கொல்லியில் இருந்து கொளப்பள்ளி செல்லும் சாலையில் உலா வந்த யானை வாகனங்களை வழிமறித்தது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்து, சிறிது தூரத்துக்கு முன்பு வாகனங்களை நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த பிதிர்காடு வனகாப்பாளர் ராஜேஸ்குமார் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் சம்பவ இடத்துக்கு சென்று காட்டு யானையை விரட்டினர். பின்னர் அங்கிருந்து அய்யன்கொல்லி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே முகாமிட்டது. இதனால் அங்கு வந்த நோயாளிகள் பீதி அடைந்தனர். இதேபோல் கொளப்பள்ளி டேன்டீ ரேஞ்ச் எண்.2 அய்யப்பன் கோவில் அருகே தொழிலாளர்கள் குடியிருப்புகளை காட்டு யானைகள் முற்றுகையிட்டன. தகவல் அறிந்த சேரம்பாடி வனகாப்பாளர் குணசேகரன் மற்றும் வனத்துறையினர் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்