search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொடைக்கானல் அருகே தனியார் விடுதிக்குள் புகுந்த காட்டு யானைகள்
    X

    தனியார் விடுதிக்குள் புகுந்த காட்டு யானைகள்

    கொடைக்கானல் அருகே தனியார் விடுதிக்குள் புகுந்த காட்டு யானைகள்

    • கொடைக்கானல் வனப்பகுதியில் யானை, காட்டெருமை, காட்டு பன்றி, முயல், மான் உள்ளிட்ட வன விலங்குகள் வசித்து வருகின்றன.
    • தனியார் விடுதிக்குள் 5-க்கும் மேற்பட்ட காட்டு யானை புகுந்துள்ளது. இதனால் ஹோட்டல் ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்

    கொடைக்கானல் :

    கொடைக்கானலை யொட்டி உள்ள வனப்பகுதியில் யானை, காட்டெருமை, காட்டு பன்றி, முயல், மான் உள்ளிட்ட வன விலங்குகள் வசித்து வருகின்றன. இவை உணவு மற்றும் குடிநீர் தேடி இடம் பெயர்ந்து வருகின்றன.

    அப்போது குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களில் புகுந்து வருவதால் விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக குடியிருப்பு பகுதியை யொட்டி யானைகள் முகாமிட்டுள்ளன.

    அஞ்சு வீடு, பேத்துப்பாறை, பாரதி அண்ணா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வன விலங்குகளின் அட்டகாசம் தொடர்ந்து வருகிறது. மேலும் விவசாய நிலங்களையும் சேதப்படுத்தி வருகிறது.

    கடந்த சில நாட்களாக பேத்துப்பாறை, அஞ்சு வீடு ஆகிய பகுதிகளில் யானைகள் அட்டகாசம் செய்து வருகிறது. இதனால் விவசாயிகள் தங்களின் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள தனியார் விடுதிக்குள் 5-க்கும் மேற்பட்ட காட்டு யானை புகுந்துள்ளது. இதனால் ஹோட்டல் ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்துள்ளனர். மேலும் பொதுமக்களும் உயிர் பயத்தில் உள்ளனர். விரைவில் இதற்கு தக்க நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். யானைகள் கூட்டம் கூட்டமாக வருவது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×