search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மசினகுடி-ஊட்டி சாலையில் விளையாடிய காட்டு யானைகள்
    X

    மசினகுடி-ஊட்டி சாலையில் விளையாடிய காட்டு யானைகள்

    • சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
    • நடுரோட்டில் துள்ளி விளையாடியதை பார்த்தது புது அனுபவமாக இருந்தது என்றனர்.

    கூடலூர்,

    முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் மசினகுடி வனப்பகுதியில் காட்டு யானைகள், மான்கள், புலிகள், கரடிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இதை காண தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இந்தநிலையில் மசினகுடியில் இருந்து ஊட்டி செல்லும் சாலையில் 2 காட்டு யானைகள் வந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் பசுந்தீவனங்களை காட்டு யானைகள் தின்றது. சிறிது நேரத்தில் சாலையில் நின்றவாறு காட்டு யானைகள் விளையாடியது. இதனை சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களில் இருந்தவாறு கண்டு ரசித்தனர். மேலும் செல்போன்களில் வீடியோ எடுத்தனர். தொடர்ந்து காட்டு யானைகள் வனப்பகுதிக்குள் சென்றது. அதன் பின்னர் போக்குவரத்து சீரானது. இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறும்போது, சாதாரணமாக சாலையோரம் வனவிலங்குகள் நடந்து செல்லும். ஆனால், திடீரென காட்டு யானைகள் நடுரோட்டில் துள்ளி விளையாடியதை பார்த்தது புது அனுபவமாக இருந்தது என்றனர்.

    Next Story
    ×