search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு மானியத்துடன்  மாடி தோட்டம் அமைக்க பொதுமக்களுக்கு அழைப்பு
    X

    அரசு மானியத்துடன் மாடி தோட்டம் அமைக்க பொதுமக்களுக்கு அழைப்பு

    • மாடி தோட்டம் அமைக்க 50 சதவிதம் மானிய விலையில் மாடி தோட்ட தொகுப்பு வழங்க உள்ளனர்.
    • 900 ரூபாய் மதிப்பிலான இடு பொருட்களை ரூ.50 மட்டும் செலுத்தி ஒரு நபர் 2 தொகுப்பு வரை பெற்று கொள்ளலாம்.

    தாரமங்கலம்:

    தமிழக அரசின் ஊட்டம் தரும் காய்கறி தோட்டம் அமைக்கும் திட்டத்தின் கீழ் வீடுகளில் மாடி தோட்டம் அமைக்க 50 சதவிதம் மானிய விலையில் மாடி தோட்ட தொகுப்பு வழங்க உள்ளனர், அதில் 6வகை காய்கறி விதைகள், 6 செடி வளர்ப்பு பைகள்,2 கிலோ தேங்காய் நார் கழிவு கட்டிகள், வேப்ப எண்ணைய்,600 கிராம் உயிர் உரம் உள்ளிட்ட 900 ரூபாய் மதிப்பிலான இடு பொருட்களை ரூ.50 மட்டும் செலுத்தி ஒரு நபர் 2 தொகுப்பு வரை பெற்று கொள்ளலாம், பயனாளிகள் ஆதார் அட்டை நகல்,2 போட்டோவுடன் வந்து பெற்று கொள்ளலாம் என்று தாரமங்கலம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் கிருத்திகா தேவி பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

    Next Story
    ×