search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விஷம் குடித்து பெண் தற்கொலை
    X

    விஷம் குடித்து பெண் தற்கொலை

    • வல்லம் புதூர் பகுதியில் ஒரு வயலில் வேலை செய்வதற்காக ராணி சென்றார்.
    • சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    வல்லம்:

    தஞ்சையை அடுத்துள்ள வல்லம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் ரங்கசாமி மனைவி ராணி (வயது42).ரங்கசாமி இறந்துவிட்டார்.

    சம்பவத்தன்று வல்லம் அருகே உள்ள வல்லம் புதூர் பகுதியில் ஒரு வயலில் வேலை செய்வதற்காக ராணி சென்றார்.

    அங்கு வயலில் வேலை பார்த்து கொண்டிருந்த போது பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துவிட்டு ராணி மயங்கி கிடந்தார்.

    அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்துவல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×