search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    இருசக்கர வாகனம் மோதி பெண் பலி
    X

    இருசக்கர வாகனம் மோதி பெண் பலி

    • பரமத்திவேலூர் செல்லும் சாலையில், அண்ணாநகர் பகுதியில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார்.
    • இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த நபர், நடந்து சென்ற பெண் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் - பரமத்திவேலூர் செல்லும் சாலையில், அண்ணாநகர் பகுதியில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த நபர், நடந்து சென்ற பெண் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டார். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அந்த பெண், சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இது குறித்து பரமத்திவேலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, பெண்ணை உடலை மீட்டு பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    வாகனம் மோதி இறந்த பெண் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? எதற்காக இங்கு வந்தார் என்ற விபரம் தெரியவில்லை. இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற இருசக்கர வாகன ஓட்டுனர் குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×