search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    தென்காசியில் ரெயிலில் அடிபட்டு தொழிலாளி பலி
    X

    தென்காசியில் ரெயிலில் அடிபட்டு தொழிலாளி பலி

    • தாதாபீர் சுமை தூக்கும் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார்.
    • தண்டவாளத்தை கடக்க முயன்றபோது தாதாபீர் ரெயிலில் அடிபட்டு உயிரிழந்துள்ளார்.

    தென்காசி:

    தென்காசி ரெயில் நிலையத்தில் இருந்து சிறிது தூரத்தில் தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதை அப்பகுதி வழியே சென்ற பொதுமக்கள் பார்த்தனர். பின்னர் இதுகுறித்து ரெயில்வே போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் தென்காசி ரெயில்வே சப்-இன்ஸ்பெக்டர் மாரியப்பன், கணேசன், அய்யப்பன் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    அதில் தென்காசி மாலிக் காம்பவுண்ட் பகுதியில் வசித்து வரும் தாதாபீர் (வயது 45) என்பதும், இவர் தென்காசியில் உள்ள தனியார் லாரி செட்டில் சுமை தூக்கும் தொழிலாளியாக பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது. நேற்று இரவு தென்காசி ரெயில் நிலையத்தில் இருந்து கிழக்கு பகுதியில் தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிர் இழந்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×