search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    ஏலகிரி மலையில் கல்லால் தாக்கி தொழிலாளி கொலை
    X

    ஏலகிரி மலையில் கல்லால் தாக்கி தொழிலாளி கொலை

    • விவசாய நிலத்தில், கோவிந்தராஜ் முகம் சிதைந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம், ஏலகிரி மலை ஊராட்சிக்கு உட்பட்ட புத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 38), கூலித் தொழிலாளி.

    இவரது மனைவி காளீஸ்வரி (32). தம்பதியினருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    இந்நிலையில் கோவிந்தராஜ் நேற்று இரவு 9 மணி அளவில் வீட்டிலிருந்து வெளியே சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.

    இன்றுகாலை விடிந்ததும் அவரது மனைவி மற்றும் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடினர்.

    அப்போது அதே பகுதியில் உள்ள விவசாய நிலத்தில், கோவிந்தராஜ் முகம் சிதைந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.

    அவரை மர்ம நபர்கள் கல்லால் தாக்கி கொலை செய்துவிட்டு சென்றுள்ளனர். தாக்கப்பட்ட கல்லும் கோவிந்தராஜ் பிணத்தின் அருகில் கிடந்தது.

    இது குறித்து தகவல் அறிந்த திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட்ஜான், துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் மற்றும் ஏலகிரி மலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    மேலும் கோவிந்தராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×