search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    வரும் 10-ம் தேதி காவலர், தீயணைப்பாளர் பதவிக்களுக்கான எழுத்துத்தேர்வு
    X

    வரும் 10-ம் தேதி காவலர், தீயணைப்பாளர் பதவிக்களுக்கான எழுத்துத்தேர்வு

    • 7 மையங்களில் 8990 பேர் எழுதுகின்றனர்
    • காலை 8.30 மணிக்கு தேர்வு மையத்திற்கு வர அறிவுறுத்தப் பட்டுள்ளது.

    தருமபுரி,

    வருகின்ற 10.12.2023 அன்று தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள இரண்டாம் நிலை காவலர்,சிறைக்காவலர்,தீயணைப்பாளர் பதவிக்களுக்கான எழுத்துத் தேர்வு நடைபெற உள்ளது.

    இத்தேர்வு தருமபுரி மாவட்டத்தில் செந்தில் பப்ளிக் பள்ளி, அதியமான்கோட்டை 2 ஆயிரம் பேரும், விஜய் வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளி (ஆண்கள்) பென்னாகரம் ரோடு, தருமபுரி 1500 பேரும், பச்சமுத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரி(மகளிர்) குண்டல்பட்டி, தருமபுரி 600 பேரும், விஜய் வித்யாரம் சீனியர் செகண்டரி பள்ளி எஸ் வி ரோடு, தருமபுரி 600 பேரும், ஒளவையார் அரசு பெண்கள் மேல் நிலைப ;பள்ளி, தருமபுரி 1500 பேரும், பச்சமுத்து மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, தருமபுரி சேலம் மெயின் ரோடு, (பச்சையம்மன் கோவில் எதிரில்) தருமபுரி 687 பேரும், விஜய் வித்யாலயா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி நல்லம்பள்ளி, தருமபுரி 2103 (பெண்தேர்வர்கள் மட்டும்) ஆகிய 7 மையங்களில் மொத்தம் 8990 தேர்வர்கள் தேர்வெழுதவுள்ளனர்.

    இத்தேர்வானது காலை 10 மணி முதல் 12.40 மணி வரையில் (பிரதான தேர்வு மற்றும் தமிழ தகுதி தேர்வு) நடைபெறவுள்ளது. இத்தேர்வில்க லந்துகொள்ள நுழைவுச் சீட்டு வரப்பெற்றவர்கள் காலை 8.30 மணிக்கு தேர்வு மையத்திற்கு வர அறிவுறுத்தப் பட்டுள்ளது. இத்தேர்வுக்கு வரும் தேர்வர்கள் அவர்களுக்கு அனுப்பப் பட்ட நுழைவுச் சீட்டில் கூறப்பட்டுள்ள வழிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்.

    தேர்வு மையத்திற்கு எவ்வித மின்னணு மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களான எலக்ட்ரானிக் மற்றும் ஸ்மார்ட் கைகடிகாரங்கள், புளுடூத் உபகரணங்கள் செல்போன் ஆகியவற்றை எடுத்துவரக்கூடாது. என்றும் தாமதமாக வரும் தேர்வர்கள் தேர்வு மையத்தில் அனுமதிக்கப்ப டமாட்டார்கள் என்றும், முறைகேடுகளில் ஈடுபடும் நபர்கள் தேர்வு மையத்திலிருந்து வெளியேற்றப்ப டுவதுடன், தகுந்த சட்ட நடவடிக்கை களையும் எதிர்கொள்ள நேரிடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளனர். மேலும், 10.12.2023 அன்று சுமார் 900 காவல் அலுவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

    Next Story
    ×