search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    காதல் திருமணம் செய்த இளம்பெண்   தற்கொலை
    X

    காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை

    • கணவர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்று விட்டார்.
    • 4 வருடத்திற்கு முன்பு குழந்தை திருமணம் செய்து கொண்டார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த நாகமரை, நெருப்பூர் காட்டுக் கொட்டாய் அருகே உள்ள மஞ்சார அள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் மணி. இவரது மனைவி சம்பு (வயது38). இவர்களுக்கு ஒரு மகனும், விசாலனி (19) என்ற மகளும் உள்ளனர்.

    சம்புவின் கணவர் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்று விட்டார். இதைத்தொடர்ந்து சம்பு கூலி வேலைக்கு சென்று தனது மகளையும், மகனையும் படிக்க வைத்து வளர்த்து வந்தார். இந்த நிலையில் சம்புவின் மகள் விசாலனி 10-ம் வகுப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்தபோது ஏர்கோல்பட்டி அருகே உள்ள ஆத்துக்கொட்டாய் பகுதியில் வசிக்கும் ரமேஷ் என்பவரை காதலித்து வந்தார். இதனால் ரமேஷ் விசாலனியை கடந்த 4 வருடத்திற்கு முன்பு குழந்தை திருமணம் செய்து கொண்டார்.

    இது சம்பந்தமாக பென்னாகரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதற்கிடையே விசாலனியுடன் ரமேஷ் சேர்ந்து வாழ்ந்தனர். இதில் அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் விசாலனிக்கும், ரமேசுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை விசாலின் தனது தாயிடம் போனில் கூறியுள்ளார். இதற்கிடையே நேற்று விசாலனி வீட்டின் அருகே உள்ளவர்கள் சம்புவுக்கு போன் செய்து உன் மகள் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று தெரிவித்தனர். தகவலறிந்த சம்பு உடனே நேரில் சென்று பார்த்த போது தனது மகள் இறந்து கிடப்பதை கண்டு கதறி அழுதார்.

    இதுகுறித்து சம்பு ஏரியூர் போலீஸ் நிலையத்தில் தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் தகவலறிந்து உடனே சம்பவ இடத்திற்கு வந்து விசாலனியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாலனி அடித்து கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காதலித்த ரமேசை கரம் பிடிக்க சிறுவயதில் திருமணம் செய்து கொண்ட விசாலனி 4 வருடங்கள் ஆன நிைலயில் திடீரென்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து அவரது கணவர் ரமேஷ் மற்றும் உறவினர்களிடம் தருமபுரி ஆர்.டி.ஓ விசா ரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் விசா லனியின் உறவினர்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×