என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
2 குழந்தைகளை தவிக்கவிட்டு இளம்பெண் ரவுடியுடன் ஓட்டம்
- இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் சிவரஞ்சனிக்கு சிலருடன் பழக்கம் ஏற்பட்டது.
- மனைவி ரவுடியுடன் ஓட்டம் பிடித்ததை அறிந்த கணவர் வினோத்குமார் அவமானம் அடைந்தார்.
பெரம்பூர்:
ஓட்டேரி சரத்பவன் தெரு பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார். இவரது மனைவி சிவரஞ்சனி(27). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
சிவரஞ்சனி அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமாக போட்டோக்கள் பதிவிட்டு வந்தார். இதனை அவரது கணவர் வினோத்குமார் எச்சரித்தும் இது நீடித்து வந்தது.
இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் சிவரஞ்சனிக்கு சிலருடன் பழக்கம் ஏற்பட்டது. இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்து வெளியே சென்ற சிவரஞ்சனி பின்னர் திரும்பி வரவில்லை.
இதுகுறித்து அவரது கணவர் வினோத்குமார், ஓட்டேரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் ஜானி செல்லப்பா விசாரணை நடத்தினார். இதில் மாயமான சிவரஞ்சனி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பழக்கமான ஓட்டேரியை சேர்ந்த ரவுடி ஒருவருடன் ஓட்டம் பிடித்து இருப்பது தெரிந்தது. அந்த ரவுடி மீது ஓட்டேரி போலீஸ் நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. சிவரஞ்சனியை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
இந்தநிலையில், மனைவி ரவுடியுடன் ஓட்டம் பிடித்ததை அறிந்த கணவர் வினோத்குமார் அவமானம் அடைந்தார். இதில் மனவேதனையில் இருந்த வினோத்குமார் நேற்று மாலை வீட்டில் இருந்த பினாயிலை எடுத்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவருக்கு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து ஓட்டேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இளம்பெண்ணின் இன்ஸ்டாகிராம் பழக்கம் விபரீதமாக மாறி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்