search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    மாரண்டஅள்ளி அருகே மூதாட்டியை தாக்கிய வாலிபர்  கைது
    X

    மாரண்டஅள்ளி அருகே மூதாட்டியை தாக்கிய வாலிபர் கைது

    • குப்பம்மாள் ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்
    • விறகு கட்டையால் மூதாட்டியை தாக்கியதில் மூதாட்டி பலத்த காயமடைந்தார்.

    மாரண்டஅள்ளி,

    தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே சென்னப்பன் கொட்டாய் கிராமத்தை சேர்ந்த மூதாட்டி குப்பம்மாள் (வயது. 60) இவர் ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று மாலை குப்பம்மாள் ஆடுகளை மேய்த்துவிட்டு வீட்டின் முன்பு கட்டியிருந்தார்.

    அப்போது அதே பகுதியை சேர்ந்த முனியப்பன் (24) என்பவர் என் வீட்டின் முன்பு எதற்கு ஆடுகளை கட்டுகிறாய் என மூதாட்டியை தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார், மேலும் அருகில் இருந்த விறகு கட்டையால் மூதாட்டியை தாக்கியதில் மூதாட்டி பலத்த காயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    இதுகுறித்து மாரண்ட அள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து முனியப்பனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி தருமபுரிகிளை சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×