search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சின்னசேலத்தில்  கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது
    X

    சின்னசேலத்தில் கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

    • சின்னசேலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாரதி தலைமையிலான போலீசார் நேற்று காலை தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
    • ரயில்வே கேட் அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து சோதனை செய்ததில் கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    சின்னசேலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாரதி தலைமையிலான போலீசார் நேற்று காலை அண்ணா நகர், விஜயபுரம், திரு.வி.க. நகர், கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது நயினார் பாளையம் செல்லும் சாலையில் உள்ள ரயில்வே கேட் அருகே சந்தேகம் படும்படியாக நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து சோதனை செய்ததில் கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    பின்னர் அந்த வாலிபரை சின்னசேலம் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் அந்த இளைஞர் தோட்டப்பாடி கிராமத்தைச் சேர்ந்த சூர்யா (வயது 22) என்பது தெரிய வந்தது. பிறகு அவரிடம் இருந்த 100 கிராம் கஞ்சாவை கைப்பற்றி அவர் மீது வழக்குப்பதிவு செய்து கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர் படித்து சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×