search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போக்சோவில் கைதான வாலிபர் சிறையில் அடைப்பு
    X

    போக்சோவில் கைதான வாலிபர் சிறையில் அடைப்பு

    • 15 வயதான 8-ம் வகுப்பு படித்த மாணவி காணவில்லை.
    • தினேஷை கடத்தூர் போலீசார் கைது செய்து போக்சோ சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.

    பாப்பிரெட்டிப்பட்டி,

    தருமபுரி மாவட்டம் கடத்தூர் அருகே 15 வயது சிறுமியை கடத்திய வழக்கில் தலைமைறைவாக இருந்த வாலிபர்போக்சோ சட்டத்தின் கீழ் கைது. கடத்தூர் அருகே உள்ள மணியம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் 15 வயதான எட்டாம் வகுப்பு படித்த மாணவி கடந்த வாரம், காணவில்லை என அவரின் பெற்றோர்கள் கடத்தூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன மாணவியை தேடி வந்தனர். இந்த நிலையில் அந்த மாணவியை அரூர் அருகே உள்ளசெல்லம்பட்டி தோப்பு குட்டை பகுதியைச் சேர்ந்த தினேஷ் வயது (20 )என்ற வாலிபர் கடத்திச் சென்று திருமணம் செய்ததாக வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். தலைமறைவாக இருந்த தினேஷை கடத்தூர் போலீசாரால் கைது செய்து போக்சோ சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×