search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    காரைக்கால்  நெடுங்காட்டில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை
    X

    காரைக்கால் நெடுங்காட்டில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை

    • காரைக்கால் நெடுங்காட்டில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
    • சரவ ணக்குமார் இரவு சிமெண்டு கிராதி கடையில் தூங்க செல்வதாக கூறிவிட்டு சென்றார்.

    புதுச்சேரி:

    காரைக்கால் அருகே நெடுங்காடு குரும்பகரம் அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணக்குமார் (வயது33) இவர் மனைவி மணிபாரதி. இவர்களுக்கு ஸ்ரீலக்சனா(5), ஸ்ரீ தனிஷ்(3) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். சரவணக்குமார், நெடுங்காட்டில் உள்ள சிமெண்ட் கிராதி கடையில் கூலிவேலை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக சரவணகு மாருக்கு குடிபழக்கம் அதிகமானதால், வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.

    மணிபாரதி, குழந்தை களை பள்ளியில் சேர்க்க வேண்டும் என பணம் கேட்டுள்ளார். அதற்கு அவர் என்னிடம் பணம் இல்லை என கூறியுள்ளார். இதனால் கணவன் மடைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், சரவ ணக்குமார் இரவு சிமெண்டு கிராதி கடையில் தூங்க செல்வதாக கூறிவிட்டு சென்றார். மறுநாள் காலை கடை க்கு சென்று பார்த்தபோது அங்கு சரணவகுமார் தனது கைலியால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொ ண்டார். இது குறித்து மணி பாரதி, நெடுங்காடு போலீசில் புகார் கொடுத்தார். புகாரி ன்பேரில் நெடுங்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×