என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
மோட்டார் சைக்கிள் மீது போர்வெல் லாரி மோதி வாலிபர் பலி
- தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார்.
- லாரி ேலாகேஷ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
தருமபுரி.
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகேயுள்ள புதுகொக்க–ராப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு லோகேஷ்(வயது19) என்ற மகன் உள்ளார். இவர் ஊத் தங்கரையில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று தனது அக்கா வீடான ஆல்ரப்பட்டிக்கு லோகேஷ் தனது மோட்டார் சைக்கி–ளில் சென்று விட்டு கம்பை நல்லூர் இருந்து ஒடசல்பட்டி ரோட்டில் வீரபத்திரன் கொட்டாய் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த போர்வெல் லாரி எதிர் பாராத விதமாக ேலாகேஷ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட லோகேஷ் பலத்த காயம் அடைந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தருமபுரி மருத்துவ மனைக்கு சிகிச்சைக்கு கொண்டு வந்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் லோகேஷ் வரும் வழியி லேயே உயிரிழந்து விட்டதாக தகவல் தெரிவித்தனர்.
இதுகுறித்து லோகேஷின் தாயார் செல்வி கம்பை நல்லூர் போலீஸ் நிலை யத்தில் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்