search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவள்ளூர் அருகே மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி
    X

    திருவள்ளூர் அருகே மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி

    • காக்களூர் ஏரிக்கு செல்லும் நீர் போக்கு கால்வாயில் பன்றிகள் மேய்ந்து கொண்டு இருந்தார்.
    • மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்ட சந்திரன் சம்பவ இடத்திலே பலியானார்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர், அம்பேத்கர் தெரு ஏரிக்கரையை சேர்ந்தவர் சந்திரன் (வயது38). இவர் பன்றிகளை வளர்த்து விற்பனை செய்து வருகிறார்.

    இந்தநிலையில் காக்களூர் ஏரிக்கு செல்லும் நீர் போக்கு கால்வாயில் பன்றிகள் மேய்ந்து கொண்டு இருந்தார். அப்போது இதனை அருகே உள்ள காம்பவுண்ட் சுவர் மீது ஏறினார். இதில் அருகே சென்ற உயர் மின்னழுத்த மின்கம்பி சந்திரன் மீது உரசியது. மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்ட சந்திரன் சம்பவ இடத்திலே பலியானார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த திருவள்ளூர் டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×