search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மகளிர் மன்ற தலைவியை மிரட்டிய வாலிபர்கள் சிறையில் அடைப்பு
    X

    மகளிர் மன்ற தலைவியை மிரட்டிய வாலிபர்கள் சிறையில் அடைப்பு

    • ஒரு அமைப்பை ஏற்படுத்தி சமூக சேவைகள் செய்து வருகிறார்.
    • சுரேஷ், முனிராஜ் 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனி கோட்டை அருகேயுள்ள சப்ரனபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது மனைவி நிரோஷா (32).

    இவர் அதே பகுதியை சேர்ந்த பெண்களை ஒருங்கிணைத்து ஓம் சக்தி மகளிர் மன்றம் என்ற பெயரில் ஒரு அமைப்பை ஏற்படுத்தி சமூக சேவைகள் செய்து வருகிறார்.

    இதேபோல குடியரசு தினத்தன்று அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் நிரோஷா தலைமையில் சென்ற மகளிர் குழுவினர் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் உள்ளிட்டவற்றை வழங்கியுள்ளனர்.

    இந்நிலையில் அதே ஊரை சேர்ந்த சுரேஷ் (34), முனிராஜ் (32) ஆகிய 2 பேரும் நிரோஷாவின் வீட்டுக்கு சென்று நீ எப்படி குழந்தைகளுக்கு நோட்டு புத்தகம் கொடுக்கலாம் என்று கேட்டு தகராறு செய்துள்ளனர்.

    பின்னர் அவர்கள் நிரோஷாவுக்கு மிரட்டலும் விடுத்துள்ளனர். இது குறித்து அவர் தேன்கனி கோட்டை போலீசில் புகார் செய்தார்.

    அதன் பேரில் போலீசார் வழக்கு பதிந்து சுரேஷ், முனிராஜ் 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×