search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆம்பூர், குடியாத்தம் இடைத்தேர்தலையும் நிறுத்த சதி - துரைமுருகன்
    X

    ஆம்பூர், குடியாத்தம் இடைத்தேர்தலையும் நிறுத்த சதி - துரைமுருகன்

    ஆம்பூர், குடியாத்தம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை என்னை காரணம் காட்டி நிறுத்திவிடலாம் என நினைக்கின்றனர் என்று திமுக பொருளாளர் துரைமுருகன் கூறியுள்ளார். #DuraiMurugan #DMK

    ஆம்பூர்:

    இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் வேலூர் நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பிரசார பொதுக் கூட்டம் ஆம்பூரில் நடந்தது.

    கூட்டத்தில் தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் பேசியதாவது:-

    வருமானவரித் துறையினர் எதிர்கட்சி வேட்பாளர்களின் வீடுகளில் மட்டுமே சோதனை நடத்துகின்றனர். அ.தி.மு.க. வேட்பாளர்களின் ஒருவர் வீட்டிலும் இதுவரை சோதனை நடத்தவில்லை. எனது வீட்டில் நடந்த சோதனையில் என்னுடைய மகன் கதிர்ஆனந்தை சாப்பிட விடாமலும், கழிப்பறைக்கு கூட செல்ல விடாமலும் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

    இதை பார்த்த என்னுடைய மனைவி நமக்கு இருப்பது ஒரே ஒரு மகன். அவருக்கு இந்த எம்.பி. பதவியெல்லாம் வேண்டாம். அவரை விட்டு விடுங்கள் என்று கண்ணீர் வீட்டார். அந்த கண்ணீருக்கு அனைவரும் பதில் சொல்லியே தீர வேண்டும்.


    தேர்தலில் இரு வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள் என்றால் இருவரும் பிரசாரம் செய்யட்டும், மக்கள் வாக்களிக்கட்டும், வெற்றி பெறுபவர் பாராளுமன்றம் செல்லட்டும். இது நியாயம். ஆனால் குத்து சண்டையில் ஒரு போட்டியாளரின் கையையும், காலையும் கட்டிப்போட்டு விட்டு அதன் மூலம்தான் வெற்றி பெற்றதாக கூறுவதை எப்படி ஏற்க முடியும்.

    அதுபோல எங்கள் வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடத்த செய்து, தேர்தல் பணிகளை முடக்கி விட்டு அதன் மூலம் தேர்தலில் வீழ்த்தி விட்டோம் என்று கூறுவது நியாயமாக இருக்காது. ஆம்பூர், குடியாத்தம் ஆகிய சட்டமன்ற இடைத் தேர்தலில் தி.மு.க. வெற்றிபெறும் என உளவுத்துறை அறிக்கை அளித்துள்ளது.

    அதனால் இந்த 2 சட்டமன்ற இடைத்தேர்தலையும் என்னை காரணம் காட்டி நிறுத்திவிடலாம் என நினைக்கின்றனர். எனது மகன் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டால் சிறப்பாக பணியாற்றி தொகுதி மக்களின் அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பார்.

    இவ்வாறு அவர் பேசினார். #DuraiMurugan #DMK

    Next Story
    ×