என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
13ந்தேதி ராமநாதபுரம் வருகை- வேட்பாளர்களை அறிமுகம் செய்து பிரதமர் மோடி பேசுகிறார்
Byமாலை மலர்10 April 2019 12:01 PM GMT (Updated: 10 April 2019 12:01 PM GMT)
ராமநாதபுரத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி வருகிற 13-ந்தேதி தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். Loksabhaelections2019 #BJP #PMModi
ராமநாதபுரம்:
ராமநாதபுரத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி வருகிற 13-ந்தேதி தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். இதையடுத்து ராமநாதபுரம் பாரதிநகர் அம்மா பூங்கா அருகே பிரமாண்ட மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட பா. ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் முரளிதரன் கூறியதாவது:-
வருகிற 13-ந் தேதி காலை 10.30 மணிக்கு ஹெலிகாப்டரில் ராமநாதபுரம் வரும் பிரதமர் மோடிக்கு தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.
10.45 மணிக்கு பிரதமர் பிரசார மேடைக்கு வருகை தருகிறார். இந்த கூட்டத்தில் தமிழக முதல்- அமைச்சர் பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மணிகண்டன், ராஜேந்திர பாலாஜி, விஜய பாஸ்கர், அன்வர் ராஜா எம்.பி. உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் ஆகிய பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களும் கலந்து கொள்கின்றனர்.
ராமநாதபுரம், மதுரை, புதுக்கோட்டை, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார். #Loksabhaelections2019 #BJP #PMModi
ராமநாதபுரத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி வருகிற 13-ந்தேதி தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். இதையடுத்து ராமநாதபுரம் பாரதிநகர் அம்மா பூங்கா அருகே பிரமாண்ட மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட பா. ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் முரளிதரன் கூறியதாவது:-
வருகிற 13-ந் தேதி காலை 10.30 மணிக்கு ஹெலிகாப்டரில் ராமநாதபுரம் வரும் பிரதமர் மோடிக்கு தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.
10.45 மணிக்கு பிரதமர் பிரசார மேடைக்கு வருகை தருகிறார். இந்த கூட்டத்தில் தமிழக முதல்- அமைச்சர் பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மணிகண்டன், ராஜேந்திர பாலாஜி, விஜய பாஸ்கர், அன்வர் ராஜா எம்.பி. உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் ஆகிய பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களும் கலந்து கொள்கின்றனர்.
ராமநாதபுரம், மதுரை, புதுக்கோட்டை, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார். #Loksabhaelections2019 #BJP #PMModi
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X