search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கேரளாவில் மாணவிகளை பலாத்காரம் செய்த ஆசிரியருக்கு 169 ஆண்டுகள் ஜெயில்
    X

    கேரளாவில் மாணவிகளை பலாத்காரம் செய்த ஆசிரியருக்கு 169 ஆண்டுகள் ஜெயில்

    • போக்சோ பிரிவில் 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
    • ரூ. 6 லட்சத்து 4 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள ஆலுவா பகுதியைச் சேர்ந்தவர் யூசுப் (வயது 72).

    இவர் கோட்டயம் அருகே உள்ள கடுந்துருத்தியில் செயல்படும் அரபி பாட சாலையில் கடந்த 2019-ம் ஆண்டு ஆசிரியராக பணியாற்றி வந்தார். அப்போது அவர், மத்ரசாவுக்கு வந்த மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்தததாக புகார் கூறப்பட்டது.

    இதுகுறித்து தலையோ லப்பரம்பு போலீசார் விசாரணை நடத்தினர். இதில் ஆசிரியல் யூசுப், மாணவிகளை பலாத்காரம் செய்தது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அவர் மீது போக்சோ பிரிவில் 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

    இது தொடர்பான வழக்கு கடுந்துருத்தி கோர்ட்டில் நடைபெற்றது.வழக்கை நீதிபதி விசாரித்து யூசுப்புக்கு 5 வழக்குகளில் மொத்தம் 169 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.மேலும் ரூ. 6 லட்சத்து 4 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

    Next Story
    ×