என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
கார் மீது பஸ் மோதல்: திருப்பதி கோவிலுக்கு வந்த திருச்சி பக்தர்கள் 3 பேர் பலி
நகரி:
திருச்சி மாவட்டம் பேரமங்கலம் பஞ்சாயத்து மானியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி காரில் தனது குடும்பத்தினருடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார்.
சனிக்கிழமை காலை திருமலை வந்த அவர்கள் இரவு தரிசனம் முடித்து விட்டு நேற்று காலை திருச்சி திரும்பிக் கொண்டு இருந்தனர். காரில் 9 பேர் பயணம் செய்தனர். ராமசாமி காரை ஓட்டிவந்தார்.
கூட்டலப்பட்டு நாயுடுபேட்டை தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது எதிரே வந்த ஆந்திர அரசு பஸ் கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் கார் நசுங்கியது.
காரில் பயணம் செய்த ராமசாமி, ஆனந்த் ஆகியோர் அதே இடத்தில் பலியானார்கள் யுவராணி என்ற பெண் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இறந்து போனார்.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ராஜ்குமார், பாலகிருஷ்ணா, மகாலட்சுமி, காமேஷ்குமார், மோகனப்பிரியா, மேனகா ஆகியோர் திருப்பதி ரூயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
பஸ்சில் வந்தவர்களில் 10 பேர் லேசான காயம் அடைந்தனர். அவர்களுக்கும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்